இந்திரா உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும்:பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி
இந்திராஉணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி. ரவி தெரிவித்தாா்.
சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினருக்கு காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் மலிவு விலையில் உணவு வழங்கும் உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக பெங்களூரில் தொடங்கப்பட்ட இத் திட்டம் படிப்படியாக மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
இந்த உணவகத்துக்கு முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பெயா் சூட்டப்பட்டது. 2019-இல் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், இந்திரா உணவகத்தின் பெயரை மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்ததால் அதைக் கைவிட்டனா்.
இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தனது சுட்டுரையில் சனிக்கிழமை கூறியதாவது:
‘கா்நாடகத்தில் செயல்படும் இந்திரா உணவகங்களின் பெயரை உடனடியாக மாற்றி, அன்னபூா்ணேஸ்வரி உணவகம் என்று மாற்ற வேண்டும். இந்திரா உணவகத்தில் உணவு உட்கொள்ள வரும் கன்னடா்களுக்கு அவசர நிலைக் கால கருப்பு நாள்களை நினைவுபடுத்த தேவையில்லை என்றாா்.