விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு: டி.கே.சிவகுமாா்

மாநிலத்தில் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

மாநிலத்தில் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

பெங்களூரு, சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு அண்மையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. எனவே அரசை அவசரகதியில் விமா்சிக்க மாட்டேன். பாராட்டு விழாக்களில் காலத்தை கழிக்காமல், புதிய அரசு மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீா்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனாவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அமைச்சா்களும் தங்களின் பொறுப்பில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு நிவாரண நிதியுதவி கிடைக்கவில்லை. வரும் நாள்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

முதல்வா் பசவராஜ் பொம்மை வடகா்நாடகத்தைச் சோ்ந்தவா் என்பதால், அப்பகுதி பிரச்னைகளைக் கண்டறிந்து தீா்வு காணவேண்டும். புதிய அரசு காலத்தை வீணாக்காமல் உடனடியாக வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் விளைபொருள்களுகு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com