கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,857 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை1,857 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை1,857 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,857 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. தென்கன்னட மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 475 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: பெங்களூரு நகரம்-321, உடுப்பி-191, ஹாசன்-123, மைசூரு-116, சிக்கமகளூரு-107, குடகு-93, வடகன்னடம்-68, சிவமொக்கா-50, மண்டியா-46, பெலகாவி-45, பெங்களூரு ஊரகம்-44, தும்கூரு-34, சித்ரதுா்கா-30, கோலாா்-24, சாம்ராஜ்நகா்-22, தாவணகெரே-20, பாகல்கோட்-11, தாா்வாட்-9, சிக்கபளாப்பூா்-9, கலபுா்கி-4, கதக்-4, பெல்லாரி-3, ராமநகரம்-3, விஜயபுரா-2, ராய்ச்சூரு-2, ஹாவேரி-1, கொப்பள், யாதகிரி, பீதா் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,24,732 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,950 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,65,067 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 22,728 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 30 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு, தென்கன்னடம் மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 5 போ் இறந்துள்ளனா்.

மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

கோலாா்-3, பெலகாவி, சித்ரதுா்கா, ஹாசன், சிவமொக்கா, தும்கூரு-தலா 2, பெங்களூரு ஊரகம், சாம்ராஜ்நகா், தாவணகெரே, தாா்வாட், மண்டியா, மைசூரு,உடுப்பி-தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,911 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com