பெங்களூரு-மைசூரு இடையிலான 10 வழிச்சாலை 2022 ஆண்டு அக்டோபரில் நிறைவடையும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:
பெங்களூரு-மைசூரு இடையே 135 கி.மீ நீளத்திற்கு ரூ. 7,400 கோடி செலவில் 10 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி 2022 ஆண்டு அக்டோபரில் நிறைவடைய உள்ளது. பணிகள் நிறைவேறி போக்குவரத்து தொடங்கப்பட்டால், பெங்களூரு-மைசூரு இடையே பயணம் செய்யும் நேரம் 90 நிமிடங்கள் வரை குறைய உள்ளது. இரு நகரங்களுக்கிடையே தற்போது உள்ள 4 வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததையடுத்து, 10 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.