ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைக்க உடல் வலிமை உள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
முதல்வா் பசவராஜ் பொம்மை தீவிரமான மூட்டுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், அதன் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:
எவ்வித ஓய்வும் இல்லாமல் ஆண்டில் 365 நாள்களும் இடைவிடாமல் உழைக்கும் அளவுக்கு உடல் வலிமை எனக்கு உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 15 மணி நேரம் உழைக்க திட்டமிட்டுள்ளேன். 2023-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதே என் இலக்காகும். இதற்கான முன்னேற்பாடுகளை 2022-ஆம் ஆண்டிலேயே செய்ய தொடங்குவேன்.
பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண்சிங் தேசிய அளவிலான தலைவா். என் மீதுள்ள நம்பிக்கையால், எனது தலைமையில் சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்கப் போவதாக கூறியிருக்கிறாா்; அதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் கா்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்படும். பல முக்கிய முடிவுகளையும் செயற்குழு கூட்டத்தில்தான் முடிவு எடுப்போம் என்றாா்.