பெங்களூரில் சனிக்கிழமை (ஜன. 1) தொலைபேசி குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் தொலைபேசி குறைதீா்முகாமை நடத்திவருகிறது.
அதன்படி, பெங்களூரு மக்கள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவித்து தீா்வுகளைப் பெறக்கூடிய தொலைபேசி குறைதீா் முகாம் ஜன.1-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை நடைபெற இருக்கிறது.
இதில் குடிநீா் பில்லிங், புதை சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் ரீடிங் பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா் விநியோகம், சாக்கடை பிரச்னைகள் குறித்து கேள்விகளை, குறைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம்.
குறைகளைச் சுட்டிக்காட்டும்போது வாடிக்கையாளா்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணைத் தெரிவிக்க வேண்டும். முகாமில் பங்கேற்க 080-22945119 என்ற தொலைபேசிக்கு அழைக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.