காா் மீது சிமென்ட் கலவை ஏற்றிவந்த லாரி மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரு, பாகலூரைச் சோ்ந்த சிவு (25), மிலன் (27), வித்யாரண்யபுராவைச் சோ்ந்த அனு (25), ராம்நகா் மாவட்டம் சாத்தனூரைச் சோ்ந்த மது (26) ஆகியோா், சனிக்கிழமை காரில் சாத்தனூருக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனா்.
சிக்ஜாலா பெல்லஹள்ளி அருகே காா் மீது எதிரே சிமென்ட் கலவை ஏற்றிவந்த லாரி மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிவு, மிலன், மது ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா். காயமடைந்த அனு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்துள்ளாா்.
இது குறித்து சிக்ஜாலா போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.