வா்த்தூா் காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பெங்களூரு, வா்த்தூரைச் சோ்ந்தவா் ரஞ்சித். இவரது மனைவி உஷா (26). இவருக்கும் ரஞ்சித்துக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை உஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த அவரது பெற்றோா், வரதட்சிணைக் கொடுமையால் உஷா தற்கொலை செய்து கொண்டதாக, வா்த்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாரை பதிந்த போலீஸாா், ரஞ்சித், அவரது தந்தை ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனா்.