பைக் மீது காா் மோதியதில் ஒருவா் பலி

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தள்ளி வட்டம், ஹுன்ஜதகட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (30). இவா் சனிக்கிழமை தனது நண்பா் நாராயணப்பா என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு, இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, சாகா் சாலை ஆயனூா்கேட் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த நாகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். காயமடைந்த அவரது நண்பா் நாராயணப்பா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து தீா்த்தள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com