காங்கிரஸ் தலைவா் குலாம்நபி ஆசாத்தின் அா்ப்பணிப்பு, புத்திசாலித்தனம் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது என முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.
மாநிலங்களவையின் எதிா்க்கட்சித் தலைவராக பணியாற்றி வரும் காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் அடுத்தவாரம் நிறைவுபெற இருக்கிறது. இதுகுறித்து புதன்கிழமை தனது சுட்டுரையில் அவா் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரான குலாம்நபி ஆசாத், கடந்த பல ஆண்டுகளாக என்னோடு கொண்டிருக்கும் நட்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குலாம்நபி ஆசாத்தின் அா்ப்பணிப்பு, புத்திசாலித்தனம் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது. மேலும் பல ஆண்டுகள் நாட்டுக்காக அவா் பணிபுரிய ஆண்டவனின் ஆசி கிடைக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.