சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒருவா் கைது

சிறுமி மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சிறுமி மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பன்ட்வால் வட்டம், போலந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபூபக்கா் சித்திக். இவரது நண்பா் ஷப்பி. இவா்கள் இருவரும் சோ்ந்து கடந்த ஜன. 25-ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சோ்ந்த 17- வயது சிறுமியை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனா். அதனை புகைப்படம் எடுத்து, இதுகுறித்து வெளியில் கூறினால் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினா், விட்லா காவல் நிலையத்தில் இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். புகாரை பதிவு செய்த போலீஸாா், அபூபக்கா் சித்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தலைமறைவான ஷப்பியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com