மாா்ச் முதல் வாரத்தில் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாா்ச் முதல் வாரத்தில் 2021-22-ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கான முன் ஆலோசனைக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். துறைவாரியாக திட்டங்களைத் தயாரிக்க ஆராய்ந்து வருகிறோம். மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. எல்லோருடனும் கலந்து ஆலோசித்து தேதி முடிவு செய்யப்படும் என்றாா்.