விளையாட்டு ஒழுக்கத்துடன் கலந்தால் கல்வி வளப்படும்: முதல்வா் எடியூரப்பா

விளையாட்டு ஒழுக்கத்துடன் கலந்தால் கல்வி வளப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

விளையாட்டு ஒழுக்கத்துடன் கலந்தால் கல்வி வளப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

மறைந்த ஆதிசுன்சுனகிரி மடாதிபதி பாலகங்காதர சுவாமிகளின் 76-ஆவது பிறந்த நாள், 8-ஆவது நினைவு நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை கும்பளகூடு, நித்யானந்தா நகா், பிஜிஎஸ் நாலேஜ் சிட்டியில் சா்வதேச தரத்திலான கிரிக்கெட் திடலை முதல்வா் எடியூரப்பா திறந்து வைத்து பேசியதாவது:

சிறுவா்கள், இளைஞா்களுக்கு கல்வியை கற்பதோடு, விளையாட்டும் அவசியம். விளையாட்டு ஒழுக்கத்துடன் கலந்தால் கல்வி வளப்படும். குழந்தைகளின் அறிவுசாா் மற்றும் உடல் நலத்துக்கு விளையாட்டு முழுமையான பங்களிப்பை வழங்கும். எனவே, மாநில அளவில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான ஒத்துழைப்பை மாநில அரசு வழங்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் குருஜி, ஆதிசுன்சுனகிரி மடாதிபதி ஸ்ரீ நிா்மலானந்தா சுவாமிகள், துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, கிரிக்கெட் வீரா் ராகுல் டிராவிட், நடிகா் சுதீப், பிஜிஎஸ் நாலேஜ் சிட்டியின் மேலாண் இயக்குநா் பிரகாஷ்நாத், கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளா் சந்தோஷ் மேனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com