ரத சப்தமியையொட்டி, ஆடுகோடி காவல் சரகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.19) திருவிழா நடைபெறுவதால் அப் பகுதியில் மது விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களுரு, ஆடுகோடி காவல் சரகத்தில் ரத சப்தமியையொட்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனால் ஆடுகோடி காவல் சரகத்தில் 19-ஆம் தேதி காலை 6 மணி முதல் 20-ஆம் தேதி காலை 6 மணி வரை மது விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவையொட்டி ஆடுகோடியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸாரின் வழிகாட்டுதலின்படி மாற்றுச் சாலைகளில் வாகனங்களை பொதுமக்கள் ஓட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.