ஆடுகோடி காவல் சரகத்தில் இன்று மது விற்கத் தடை

ரத சப்தமியையொட்டி, ஆடுகோடி காவல் சரகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.19) திருவிழா நடைபெறுவதால் அப் பகுதியில் மது விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரத சப்தமியையொட்டி, ஆடுகோடி காவல் சரகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.19) திருவிழா நடைபெறுவதால் அப் பகுதியில் மது விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களுரு, ஆடுகோடி காவல் சரகத்தில் ரத சப்தமியையொட்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனால் ஆடுகோடி காவல் சரகத்தில் 19-ஆம் தேதி காலை 6 மணி முதல் 20-ஆம் தேதி காலை 6 மணி வரை மது விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவையொட்டி ஆடுகோடியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸாரின் வழிகாட்டுதலின்படி மாற்றுச் சாலைகளில் வாகனங்களை பொதுமக்கள் ஓட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com