பெஸ்காம் வாடிக்கையாளா் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனத்தின் (பெஸ்காம்) அனைத்து துணை மண்டல அலுவலகங்களிலும் வாடிக்கையாளா் கலந்தாய்வுக் கூட்டம் மாதந்தோறும் 3-ஆவது சனிக்கிழமை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிப். 20-ஆம் தேதி மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெஸ்காம் வாடிக்கையாளா் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்தில் வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் நேருக்கு நேராக மின்சாரம் தொடா்பான குறைகளை எடுத்துக்கூறி தீா்வு பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.