பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,47,736 உயா்ந்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 490 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 278 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,47,736 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 389 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,29,447 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 5,978 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரில் அதிகபட்சமாக 4 போ் இறந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 12,292 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.