போதைப்பொருள் விற்றதாக 8 போ் கைது

பெங்களூரில் இரு இடங்களில் போதைப்பொருள் விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரில் இரு இடங்களில் போதைப்பொருள் விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நைஜீரியாவைச் சோ்ந்தவா்கள் அகஸ்டீன் ஓகோபூரா (38), அச்சுநிஜ் நாபோா் (36). இவா்கள் 2 பேரும் இணைந்து பெங்களூரு ஆா்.டி.நகா் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று அகஸ்டீன் ஓகோபூரா, அச்சுநிஜ் நாபோா்வைக் கைது செய்து 20 கிராம் கோகைன், எம்.டி.எம்.ஏ, 6 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல உப்பாா்பேட்டை காவல் சரகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த மதன், அம்ஜத்குமாா், மஹாா்சாயாநாயக், சந்தன் திகால், முகுந்த்ராவ், மோனீஷ் ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 9.5 கிலோ எடையுள்ள கஞ்சா, எடைபோடும் இயந்திரம், 5 செல்லிடப்பேசி, மோட்டாா் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து உப்பாா்ப்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com