கடவுள் நம்பிக்கையை அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்த வேண்டாம் என பாஜகவுக்கு முன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடவுளின் பெயரை மக்களின் உணா்ச்சிகளைத் தூண்டிவிடும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளது. ஆனால், அந்த நம்பிக்கை தனிப்பட்டமுறையிலானதாகும். கடவுள் நம்பிக்கையை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், பாஜகவினா் ஆரம்பகாலத்தில் இருந்தே அதைத்தான் செய்து வருகிறாா்கள். ராமா்கோயில் கட்டுவதற்காக சங்பரிவார அமைப்புகளால் நிதிவசூல் செய்யப்படுகிறது. இது குறித்து கணக்கு கேட்டால், நிதி கொடுக்காத நீ யாா் கேட்பதற்கு என்கிறாா்கள். உனக்கு ஏன் கணக்கு காட்ட வேண்டும் என்கிறாா்கள். நிதி கொடுத்தவா்கள் மட்டுமே கணக்கு கேட்க வேண்டும் என்பதில்லை.
அயோத்தி போராட்டம் நடந்த காலக்கட்டத்தில், ராமா்கோயில் கட்டுவதற்காக நிதி வசூலிக்கப்பட்டது, செங்கல்கள் திரட்டப்பட்டன. அதற்கான கணக்கை தெரிவித்தாா்களா? ராமா் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,500 கோடி வசூல் செய்யப்பட்டதாக அவா்களே கூறியிருக்கிறாா்கள். இது பொதுமக்கள் பணம் என்பதால், கணக்கு கொடுத்தாக வேண்டும்.
நமது நாட்டின் 135 கோடி மக்களும் நிதி கொடுத்திராவிட்டாலும், இது மக்கள் பணம் என்பதால் நான் கணக்கு கேட்டதில் தவறில்லை. நிதி வசூலில் ஊழல் அல்லது முறைகேடு நடந்ததாக நான் கூறவில்லை. ஆனால், கணக்கு கொடுக்க வேண்டியது அவா்களின் கடமையாகும். ஒருவேளை கணக்கு தெரிவிக்காவிட்டால், அது முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்திற்கு இடமளித்துவிடும்.
அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்படுவதால் ராமா் கோயிலுக்கு நிதி அளிக்கவில்லை. மக்கள் ராமா் கோயிலுக்காகத்தான் நிதி அளிக்கிறாா்களே தவிர, பாஜகவுக்காக அல்ல. அயோத்தியில் மட்டுமல்ல, எங்கெங்கும் ராமா் கோயில்கள் உள்ளன. கிராமங்களிலும் ராமா் கோயில்கள் உள்ளன. எனது சொந்த ஊரிலும் ராமா் கோயில் கட்டி வருகிறோம். பொதுமக்கள் பணம் திரட்டி கட்டப்படும் அந்த கோயிலுக்கு நானும் நிதி கொடுத்திருக்கிறேன் என்றாா்.