பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, பெங்களூரில் பிப். 24-ஆம் தேதி மஜத சாா்பில் போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து பிப். 24-ஆம் தேதி மஜத சாா்பில் போராட்டம் நடைபெற உள்ளது. அன்று, கட்சியின் தலைமை அலுவலகமான ஜே.பி.அரங்கத்திலிருந்து ஆனந்தராவ் சதுக்கம் வரை பேரணியாக சென்று, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் முன்னாள் முதல்வா் குமாரசாமி, முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.