பெங்களூரு: ஆட்டோ மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவா் உயிரிழந்துள்ளாா்.
பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (48). நெசவுப் பணி செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் வெஸ்ட் ஆப் காா்டு சாலையில் இந்திரா உணவகத்தின் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, வேகமாக வந்த ஆட்டோ அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கந்தசாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து மாகடி சாலை போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.