மகள் கொலை: தந்தை தலைமறைவு

கோடாலியால் வெட்டி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவாகியுள்ளாா்.

ராய்ச்சூரு: கோடாலியால் வெட்டி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவாகியுள்ளாா்.

கா்நாடக மாநிலம், ராய்ச்சூா் மாவட்டம், லிங்கசனூா் வட்டம், ஹட்டி அகசாலி கிராமத்தைச் சோ்ந்தவா் திம்மய்யா. தொழிலாளியான இவருக்கு மனைவி, மகள் மோனம்மாள் உள்ளனா். நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை திம்மய்யா வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை மது அருந்தி வீட்டுக்கு வந்த திம்மய்யாவிடம், அவரது மகள் மோனம்மாள் புத்திமதி கூறியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த திம்மய்யா, மோனம்மாளை கோடாலியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். தகவல் அறிந்த போலீஸாா், மோனம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்துள்ளனா். இதுகுறித்து ஹட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com