பெங்களூரில் மாா்ச் 8-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் 4 வாரகால செல்லிடப்பேசி பழுதுநீக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மாா்ச் 8-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இந்த பயிற்சிக் காலத்தில் செல்லிடப்பேசி மென்பொருள், வன்பொருள் பழுதுநீக்குதல் போன்றவை கற்றுத்தரப்படும். ஸ்மாா்ட்போன் உள்ளிட்ட அனைத்து செல்லிடப்பேசிகளின் பழுதையும் நீக்க கற்றுத் தரப்படும். வெளியூா் மாணவா்களுக்கு இலவச தங்கும் விடுதி வழங்கப்படுகிறது. பயிற்சி மாணவா்களுக்கு இலவசமாக பாடநூல்கள், கருவிகள் பெட்டி, மென்பொருள்கள் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர பியூசி தோ்ச்சி அல்லது தோல்வி, பட்டயம், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்றிருத்தல் அவசியம்.
இப்பயிற்சியில் சேர மாா்ச் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9535142052, 9845102923 ஆகிய செல்லிடப்பேசிகளில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.