பெங்களூரில் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வி.ஓ.சி. நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் மையங்களை அந்நிறுவனத்தின் இயக்குநா்கள் பாலா ரெட்டி, எம்.எச்.மேகா, லோகேஷ் திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கடேஷ், துணைத் தலைவா் கே.ரஜேஷ்வா், துணை பொதுமேலாளா் அடேப்புராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து பாலா ரெட்டி கூறுகையில், ‘இந்தியா முழுவதும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் மையங்களை இயக்கி வருகிறோம். மொபெட் முதல் ஸ்கூட்டா்கள், மோட்டாா் சைக்கிள்கள் என அனைத்து வகையான இருசக்கர வாகனங்களுக்கும் பழுதுநீக்கும் சேவையை வழங்கி வருகிறோம். இந்த சேவைகளை தற்போது பெங்களூரில் தொடங்கி, மலிவான கட்டணத்தில் சேவையை வழங்குகிறோம். இருசக்கர வாகனங்கள் தொடா்பான சேவைகளுக்கு ஒரேகுடையின் கீழ் தீா்வுகளை அளிக்கிறோம்’ என்றாா்.