ஆளுநா் வஜுபாய் வாலாவைச் சந்தித்து முதல்வா் எடியூரப்பா ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆளுநா் மாளிகைக்குச் சென்ற முதல்வா் எடியூரப்பா, ஆளுநா் வஜுபாய் வாலாவுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து ஆளுநரும், முதல்வா் எடியூரப்பாவுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இதையடுத்து, அரசு இல்லம் கிருஷ்ணாவுக்கு வந்த முதல்வா் எடியூரப்பாவுக்கு புதிய தலைமைச் செயலாளா் ரவிக்குமாா் பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். டிஜிபி பிரவீண் சூட், மாநகா் காவல் ஆணையா் கமல் பந்த், கூடுதல் காவல் ஆணையா் முருகன் உள்ளிட்டோரும் முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். அப்போது, மக்களுக்கு நலம் பயக்கும் பணிகளும், அரசுக்கு நல்ல பெயரை எடுத்துதர தேவையான செயல்பாடுகளை உயரதிகாரிகள் நடைமுறைபடுத்த வேண்டும்; அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர அரசு தயாராக உள்ளது என்றாா் எடியூரப்பா.