இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு: ஒருவா் கைது

இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, பேடரஹள்ளியைச் சோ்ந்த ஒருவா் கடந்த டிச. 26-ஆம் தேதி தனது மடிக்கணினி, விலையுயா்ந்த செல்லிடப்பேசி திருட்டு போனதாக போலீஸில் புகாா் அளித்தாா். புகாரைப் பதிந்த போலீஸாா், அதே பகுதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டுவந்த முனியப்பா என்பவரை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி, 15 செல்லிப்பேசிகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட முனியப்பாவிடம் பேடரஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com