மென்பொறியாளா் வீட்டில் புகுந்த மா்ம நபா்கள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.
பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி, ஈரண்ணாபாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் தீபக். தனியாா் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த இவா், கடந்த ஜன. 1-ஆம் தேதி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை பெங்களூரு திரும்பியுள்ளாா். இதற்கிடையே அவரது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தீபக் வீட்டின் காவலாளி காணாமல் போயுள்ளதால், சந்தேகத்தின் பேரில் போலீஸாா் அவரை தேடிவருகின்றனா்.