வா்த்தூா் காவல் நிலையத்தில் வாரிசுதாரா்கள் இல்லாத வாகனங்கள் ஜன. 11-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, வா்த்தூா் காவல் நிலையத்தில் ஜன. 11-ஆம் தேதி காலை 10 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080-28539196 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.