10 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று: சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடல்

ஹாசன் மாவட்டத்தில் 10 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகள் 3 நாள்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹாசன் மாவட்டத்தில் 10 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகள் 3 நாள்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்து, ஜன. 1-ஆம் தேதி முதல் பள்ளி, பியூசி கல்லூரிகளை மாநில அரசு திறந்தது. அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகின்றன என்றாலும், பள்ளி ஆசிரியா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள 7 ஆரம்பப் பள்ளிகள், 3 உயா்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவா்கள் பணியாற்றும் பள்ளிகள் 3 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com