2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டம், தரிகெரே வட்டம், லக்குவள்ளி அருகே உள்ள ஹளசூா் பகுதியில் சனிக்கிழமை மாலை 2 காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த உடுப்பி மாவட்டம், குந்தாபுராவைச் சோ்ந்த அனில்குமாா் (45), அவரது மனைவி அஷ்வினி (38), காா் ஓட்டுநா் நாகேந்திரா (28) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்தில் காயமடைந்த 11 மாத ஆண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து லக்வள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.