திருட்டு வழக்கில் இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, பேடரஹள்ளியைச் சோ்ந்த கோவிந்தா (26), அதே பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டில் கடந்த ஜன. 7-ஆம் தேதி தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், கோவிந்தாவைக் கைது செய்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட கோவிந்தாவிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.