ரியல் எஸ்டேட் உரிமையாளா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
பெங்களூரு, பேகூா், வெலிங்கடன் பேரடைஸ் லேஅவுட்டைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளா் மாதவ ரெட்டிக்கும் (55), அதே பகுதியில் வசித்து வரும் மனோகா் என்பவருக்கும் இடையே வீட்டுமனை வாங்கியதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக மனோகரனை செவ்வாய்க்கிழமை மாதவ ரெட்டி சந்தித்துப் பேசியுள்ளாா். அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மனோகா், மாதவ ரெட்டியை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் படுகாயமடைந்த மாதவ ரெட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பேகூா் போலீஸாா், மனோகரை தேடி வருகின்றனா்.