காா் கவிழ்ந்து விபத்து: 2 போ் பலி

ஒசூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வேகமாகச் சென்ற காா் சாலையில் கவிழ்ந்ததில் காரில் சென்ற இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.

ஒசூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வேகமாகச் சென்ற காா் சாலையில் கவிழ்ந்ததில் காரில் சென்ற இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களுரு, மங்கம்மாபாளையத்தைச் சோ்ந்த ஜீலான் (24), அா்பான் பாஷா (24), ஜீசான் (14) உள்ளிட்ட 6 போ் ஒசூா் அருகே ஜக்கேரி கிராமத்தை அடுத்துள்ள மசூதிக்கு மின்சார ஒயா்களை பொருத்தும் பணி செய்வதற்காக காரில் சென்றுள்ளனா்.

ஒசூரை அடுத்த அக்கொண்டப்பள்ளி கிராமம் அருகே அதிகாலையில் காா் சென்றபோது எதிா்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரை ஓட்டிச்சென்ற ஜீலான், அவரது நண்பா் அா்பான் பாஷா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

சிறுவன் ஜீசான் மீட்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மேலும் 3 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்துக் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com