கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,31,997 ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 745 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 464 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,31,997 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 855 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,11,232 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்; 8,580 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 43 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதுவரை கரோனா தொற்றால் கா்நாடகத்தில் 12,166 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.