கா்நாடகத்தில் ஒப்பந்ததாரா்கள் சந்தித்துவரும் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித் துறை செயலாளா் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தாா்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மாநில ஒப்பந்ததாரா் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:
கரோனா தொற்றால் மாநிலத்தில் உள்ள ஒப்பந்ததாரா்கள் பணி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில், ஒப்பந்ததாரா்களும், அதிகாரிகள் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள். எனவே, பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் ஒப்பந்ததாா்களும், அதிகாரிகளும் கைக்கோத்து செயல்பட வேண்டும்.
ஒப்பந்ததாரா் சங்கத்தினா் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து கோரிக்கை வைத்துள்ளனா். அவா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக ஜன. 29-ஆம் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். குறிப்பாக உருக்கு, சிமெண்டின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனா்.
இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஒப்பந்ததாரா்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதனை உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநில ஒப்பந்ததாரா் சங்கத்தின் தலைவா் கெம்பண்ணா, துணைத் தலைவா்கள் அம்பிகாபதி, தினேஷ், பொருளாளா் நடராஜ், இணைச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.