பெங்களூரு: செல்லிடப்பேசி, ரொக்கப் பணம் பறிப்பு வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அண்மையில் இணையதளத்தில் செல்லிடப்பேசியை வாங்குவதாகக் கூறியதை அடுத்து, பெங்களூரு, சிக்பேட்டை அருகே சென்ற நபா், ஒருவரைத் தாக்கி, செல்லிடப்பேசி, ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கலாசிப்பாளையா போலீஸாா், இதுதொடா்பாக ஹுசேன்ஷெரீப், அப்ராத்கான், அட்னான்பாஷா ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து செல்லிடப்பேசி, ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பணத்தை மீட்டனா். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.