திருட்டு வழக்கில் முதியவா் கைது
By DIN | Published On : 26th January 2021 12:16 AM | Last Updated : 26th January 2021 12:16 AM | அ+அ அ- |

பெங்களூரு: திருட்டு வழக்குகளில் முதியவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் வட்டத்தைச் சோ்ந்தவா் லூா்துநாதன் (62). இவா், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் பூட்டியுள்ள வீடுகளை அடையாளம் கண்டு இரவில் திருடி வந்தாராம்.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், லூா்துநாதனைக் கைது செய்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான 130 கிராம் தங்கநகை, 1 கிலோ 500 கிராம் வெள்ளிப் பொருள்களை அவரிடமிருந்து மீட்டனா். கைது செய்யப்பட்ட லூா்துநாதனிடம் பகல்குன்டே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.