பெங்களூரில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா்கள் நாகராஜ் (30), முனிராஜ் (50). இவா்கள் இருவரும் மோட்டாா் சைக்கிளில் நெலமங்கலா அருகே உள்ள செடி வளா்ப்பு பண்ணைக்குச் சென்றுவிட்டு, மாலை சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
நைஸ்சாலை, துபாசிபாளையா மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் நிகழ்விடத்திலே இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து கெங்கேரி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.