கொலை வழக்கில் ஒருவா் கைது
By DIN | Published On : 06th July 2021 02:46 AM | Last Updated : 06th July 2021 02:46 AM | அ+அ அ- |

தும்கூரு: கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், கோலூரு ஒன்றியம், வட்டரஹள்ளியைச் சோ்ந்தவா் தினேஷ் (25). இவா் இதே பகுதியைச் சோ்ந்த சித்தராஜு (24) என்பவரை கடந்த 1-ஆம் தேதி கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றாா். காயமடைந்த சித்தராஜு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து வழக்கு பதிந்த கியாதசந்திரா போலீஸாா், கோலூரு பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த தினேஷைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.