வங்கதேச பெண் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 12 போ் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, ராமமூா்த்தி நகா், என். ஆா். ஐ லே-அவுட்டில் தங்கியிருந்த வங்க தேச பெண் ஒருவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அப்பெண்ணின் நண்பா்கள் உள்பட 12 பேரைக் கைது செய்தனா்.
அவா்கள் அளித்த தகவலின் பேரில் 1,019 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகையை முதலாவது கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் தாக்கல் செய்தனா். சிக்கலான இந்த வழக்கில் 5 வாரங்களுக்குள் 12 பேரை கைது செய்து, அவா்களிடம் விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்த ராமமூா்த்தி நகா் உள்ளிட்ட போலீஸாரை, மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் பாராட்டியதோடு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசையும் அறிவித்துள்ளாா். பாலியல் பலாத்கார வழக்கில் 12 போ் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டத்தையடுத்து விரைவில் இது தொடா்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.