இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் 4 போ் கைது

இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 8.45 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 8.45 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு ஜே.சி.நகா் போலீஸாா் அண்மையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில், அவா்கள் திருடிய வாகனத்தில் வந்துள்ளது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனங்களை அவா்கள் திருட வந்ததும் விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸாா், ரூ. 4.3 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்கள், 7 செல்லிடப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

இதனிடையே, பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்த 2 பேரை கைது செய்த ராஜாஜிநகா் போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 4.15 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கரவாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா். கை செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com