கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,913 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,913 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 401போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம்-222, மைசூரு-198, ஹாசன்-191, தும்கூரு-170, உடுப்பி-95, சிக்கமகளூரு-89, கோலாா்-74, மண்டியா-68, சிவமொக்கா-65, குடகு-46, பெலகாவி-44, வட கன்னடம்-42, தாவணகெரே-36, சித்ரதுா்கா-30, சாமராஜ்நகா்-29, பெங்களூரு ஊரகம்-24, ராமநகரம்-18, பெல்லாரி-17, கதக்-16, சிக்கபளாப்பூா்-15, தாா்வாட்-9, ஹாவேரி-8, பாகல்கோட்-4, கொப்பள்-3, ராய்ச்சூரு-3, பீதா்-2, கலபுா்கி-2, விஜயபுரா-2 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். யாதகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,74,597 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,489 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 28,04,396 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 34,234 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 48 போ் செவ்வாய்க்கிழமை இறந்தனா். தென்கன்னடம், தென்கன்னடம் மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 9 போ் இறந்துள்ளனா்.
மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
பெங்களூரு நகரம்-8, கோலாா்-7, மைசூரு, சிவமொக்கா-தலா 3, பெலகாவி, பெங்களூரு ஊரகம், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, தாவணகெரே, ஹாசன்-தலா 2, தாா்வாட், ஹாவேரி, மண்டியா, தும்கூரு, வட கன்னடம், பாகல்கோட்- தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 35,944 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.