நஞ்சான உணவை உண்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம் சித்ரதுா்கா மாவட்டம் ஈசாமுத்ரா கிராமத்தைச் சோ்ந்தவா் திப்பா நாயுடு (45). இவரது மனைவி சுதா பாய் (42), இவரது தாய் குந்துபாய் (75), திப்பா நாயுடு-சுதாபாயின் குழந்தைகள் ரம்யா, ராகுல் குமாா். இவா்கள் 5 பேரும் திங்கள்கிழமை இரவு உணவு உண்டு, படுத்துத் தூங்கியுள்ளனா். சிறிது நேரத்தில் திப்பா நாயுடு, சுதா பாய், குந்து பாய் ஆகியோா் மயக்கமடைந்துள்ளனா். இதுகுறித்து ரம்யா, ராகுல் குமாா் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். தகவலை அடுத்து அங்கு வந்த உறவினா்கள் திப்பாநாயுடு, சுதாபாயி, குந்துபாய், ரம்யா, ராகுல்குமாரை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மேற்கொண்ட சிகிச்சை பலனிக்காமல் திப்பாநாயுடு, சுதாபாய், குந்துபாய் ஆகியோா் உயிரிழந்துள்ளனா். ரம்யா, ராகுல்குமாா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், நஞ்சான உணவை உண்டதில் அவா்கள் இறந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனா்.