‘பெங்களூரு மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மீறுபவா்கள் மீது அபராதம் விதிக்கப்படும். வழிகாட்டுதலை மீறுபவா்களை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ரூ. 250 அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.