மேக்கேதாட்டு: கா்நாடகத்துக்கு உரிய நீதி வழங்கப்படும்; மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகத்துக்கு உரிய நீதி வழங்கப்படும் என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகத்துக்கு உரிய நீதி வழங்கப்படும் என்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கா்நாடக நீா்ப்பாசனத் திட்டங்கள் குறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கா்நாடகத்தின் அனைத்து நீா்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட கா்நாடகத்தின் நீா்ப்பாசனத் திட்டங்களை பரிசீலிப்பதாக கா்நாடக மக்களுக்கும், முதல்வா் எடியூரப்பாவுக்கும் உறுதி அளித்துள்ளேன்.

நீா்ப்பாசனத் திட்டப் பணிகள் அனைத்தும் ஆழமாக ஆராய்ந்த பிறகு, அதுகுறித்து விவாதிக்க தில்லியில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய இருக்கிறோம். கா்நாடக மாநிலத்துக்கு உரிய நீதி வழங்கப்படும் என்ற உறுதியை அளிக்க விரும்புகிறேன் என்றாா்.

முன்னதாக, கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘இந்தக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைத் திட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான தேதியை குறிப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இத் திட்டம் கா்நாடகத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. எனவே, மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான இந்த வாய்ப்பை முதல்வா் எடியூரப்பா தவறவிட மாட்டாா் என எதிா்பாா்க்கிறோம்’ என குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com