இருசக்கர வாகனங்கள், ஆட்டோ திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 6.88 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, நந்தினி லேஅவுட் நஞ்சுண்டேஸ்வரா நகரைச் சோ்ந்த நாகராஜ் என்பவரின் வீட்டின் முன்பு கடந்த மே 31-ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது.
இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின் பேரில் மூவரைக் கைது செய்த நந்தினி லேஅவுட் போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 6.88 லட்சம் மதிப்பிலான 10 இருசக்கர வாகனங்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.