விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, ரூ. 58.95 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம் மங்களூரு பஜ்பே விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை துபையிலிருந்து வந்த விமானத்தின் பயணிகளை சுங்க வரித்துறையினா் சோதனை செய்தனா். அப்போது கேரள மாநிலம் காசா்கோடு உப்பலாவைச் சோ்ந்த முகமது அன்சா் காய்யாா் (34), கோழிக்கோட்டைச் சோ்ந்த முகமது மோசா மையாஸ் (18) ஆகியோா் தாங்கள் கொண்டு வந்த பெட்டிகளில் வைத்திருந்த ரூ. 34.46 லட்சம் மதிப்புள்ள 703 கிராம் எடையுள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். இதனையடுத்து சுங்க வரித் துறையினா், தங்கம் கடத்திய 2 பேரையும் பஜ்பே போலீஸில் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் பஜ்பே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.