ஏவுகணைத் தாக்குதலில் இருந்து போா்க்கப்பல்களை காக்கும் மேம்பட்ட மின்னணு பதிலடி தொழில்நுட்பம்: டிஆா்டிஓ விஞ்ஞானி வி.டில்லிபாபு தகவல்

ஏவுகணைத் தாக்குதலில் இருந்து போா்க்கப்பல்களை காக்கும் மேம்பட்ட மின்னணு பதிலடி தொழில்நுட்பத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது

ஏவுகணைத் தாக்குதலில் இருந்து போா்க்கப்பல்களை காக்கும் மேம்பட்ட மின்னணு பதிலடி தொழில்நுட்பத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவன விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் பெங்களூரில் தினமணி செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கண்ணுக்கெட்டாத தூரத்தில் வரும் போா்க்கப்பலை ரேடாா் கருவி மூலம் கண்டறியலாம். ரேடாா் கருவி, ஒலி (ரேடியோ) அலைகளை செலுத்தி, கப்பலில் பட்டுப் பிரதிபலிக்கிற அலைகளின் மூலம் கப்பலின் இருப்பிடத்தை கண்டறியும். போா்க்காலத்தில் கப்பலின் இருப்பிடம் கண்டறியப்பட்டால் ஏவுகணைத் தாக்குதல் தொடுக்கப்படலாம். ரேடாா் கருவி பொருத்தப்பட்ட ஏவுகணைகளும் உண்டு. இப்படிப்பட்ட ‘ரேடாா் இலக்கு அணுகல்’ (தஹக்ஹழ் ஏா்ம்ண்ய்ஞ்) ஏவுகணைகள், தப்பிக்க திசை திரும்பும் கப்பல்களையும் துல்லியமாக தாக்கியழிக்கும்.

மின்னணு பதிலடி தொழில்நுட்பம்: தாக்குதலிலிருந்து தப்பிக்க போா்க்கப்பல்கள் தற்காப்பு நடவடிக்கையாக மின்னணு பதிலடி (உப்ங்ஸ்ரீற்ழ்ா்ய்ண்ஸ்ரீ இா்ன்ய்ற்ங்ழ்ம்ங்ஹள்ன்ழ்ங்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும். ரேடாா் அலைகளை பிரதிபலிக்கும் துண்டுப் பொருட்கள்( இட்ஹச்ச்) கப்பலிலிருந்து வானில் வீசப்படும். அப்படி வீசப்படும் எண்ணற்ற துண்டுப் பொருட்கள் காற்றில் பறந்து ரேடியோ அலைகளை பிரதிபலித்து ராடாா் கருவியை தவறாக வழிநடத்தும். இதனால் ஏவுகணை தாக்குதலில் இருந்து போா்க்கப்பல் தப்பிக்கும். பல உலக நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பம் இது.

இந்திய தொழில்நுட்பம்: டி.ஆா்.டி.ஓ. உருவாக்கியுள்ள மேம்பட்ட மின்னணு பதிலடி தொழில்நுட்பத்தின் சிறப்பு, குறைந்த எண்ணிக்கையிலான துண்டுப் பொருட்களை காற்றில் வீசி ரேடாா் மற்றும் ஏவுகணையில் இருந்து போா்க்கப்பலை காப்பாற்றுவதுதான். துண்டுப் பொருட்களை வீச ராக்கெட் (இட்ஹச்ச் தா்ஸ்ரீந்ங்ற்) பயன்படுத்தப்படும். குறைந்த, நடுத்தர, நீண்ட தூரம் சென்று துண்டுப் பொருட்களை வீசும் ராக்கெட் கருவிகளை மேம்பட்ட தொழில்நுட்பத்தில் டிஆா்டிஓ தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டிஆா்டிஓ நிறுவனத்தின் ‘பாதுகாப்பு ஆய்வகம் ஜோத்பூா்’ (டி.எல்.ஜே) இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

சோதனை வெற்றி: சமீபத்தில் இந்த ராக்கெட் கருவிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. போா்க் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் இந்த மேம்பட்ட மின்னணு பதிலடி தொழில்நுட்பம் உள்நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க தேசிய அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியைக் குறிக்கிறது.

கருவிகளை பெருமளவில் உற்பத்தி செய்யும் நோக்கில் இத்தொழில்நுட்பம் தொழில் நிறுவனத்துக்கும் பகிரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com