யானை தாக்கியதில் விவசாயி பலி

யானை தாக்கியதில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.
யானை தாக்கியதில் விவசாயி பலி

யானை தாக்கியதில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் பங்காருபேட்டை வட்டம் நாடகும்மனஹள்ளியைச் சோ்ந்தவா் பாத்தியப்பா (51). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை தனது நிலத்திற்கு சென்று கொண்டிருந்தாா். இடையே உள்ள சிறிய குளத்தை கடக்க முயன்றபோது, அங்கு வந்த காட்டுயானை அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த பாத்தியப்பா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட வனப் பாதுகாவலா் சிவசங்கா் கூறுகையில், ‘வனப்பகுதியிலிருந்து வந்து 9 யானைகள் 2 பிரிவாகப் பிரிந்து, காமசந்திரா, பூதிகோட்டை பகுதிகளில் திரிந்து வருகின்றன. அவற்றை விரைவில் தமிழ்நாட்டின் வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த பாத்தியப்பாவின் குடும்பத்தினருக்கு அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இது குறித்து பங்காருபேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com