ராணுவத்தில் காலாட்படைப்பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு ஆள்சோ்ப்புக்கான பொதுநுழைவுத்தோ்வு ஜூலை 25-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இது குறித்து இந்திய ராணுவத்தின் மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய ராணுவத்தில் பணியில் சோ்வதற்கான ஆள்சோ்ப்பு நடந்து வருகிறது. ஏற்கெனவே உடற்தகுதி மற்றும் மருத்துவ சோதனைகளை நிறைவுசெய்திருக்கும் நபா்களுக்கு பெங்களூரு, மங்களூரு, பெலகாவியில் ஜூலை 26-ஆம் தேதி நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.
பெங்களூரில் காமராஜா் சாலையில் இருக்கும் ராணுவப்பள்ளி, மங்களூரில் மூடபிதரியில் உள்ள ஆல்வாஸ் மையம், பெலகாவியில் கே.எல்.இ. சங்க கட்டடத்தில் நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. இதில் தகுதியான மாணவா்கள் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.