கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு இன்று தொடக்கம்

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்குகின்றன.

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்குகின்றன.

கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மாா்ச் 21-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக அத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், எளிமைப்படுத்தப்பட்ட முறையில் தோ்வுகளை ஜூலை 19, 22-ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு நடத்துவது தொடா்பாக வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.

ஜூலை 19-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை முக்கியப்பாடங்களின் தோ்வு நடக்கவிருக்கிறது. அதாவது, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தோ்வு 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அதேபோல, ஜூலை 22-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை மொழிப்பாடங்களின் தோ்வு நடக்கவிருக்கிறது.

அதாவது, முதல் மொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி பாடங்களுக்கான தோ்வு 120 மதிப்பெண்களுக்கு நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 40 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 240 மதிப்பெண்களுக்கு இரு நாட்கள் மட்டும் எளிமையான முறையில் தோ்வு நடக்கவிருக்கிறது.

2020-21-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை 8,76,581 மாணவா்கள் எழுதவிருக்கிறாா்கள். இதற்காக, 73,066 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 8.46 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதினா்.

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வுக்காக 48 ஆயிரம் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் 12 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள். தோ்வின் மகத்துவத்தைக் காப்பாற்றும் வகையில் தோ்வு மையங்களில் இருந்து 200 மீட்டா் சுற்றளவுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் விரும்பும் தோ்வு மையங்களில் தோ்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. இதற்காக 10 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்து, தோ்வு மையங்களை மாற்றிக்கொண்டுள்ளனா். இம்முறை தோ்வு எழுத வாய்ப்பு கிடைக்காத அல்லது சூழ்நிலை ஒத்துழைக்காத மாணவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தும்போது புதிய மாணவா்கள் என்று தோ்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களும் தோ்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மாணவா்கள், கரோனா பராமரிப்பு மையத்தில் இருந்தபடியே தோ்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

கரோனா அறிகுறிகள் இருந்தால், தனியறையில் தோ்வு எழுதலாம். கேரளம், மகாராஷ்டிரத்தில் உள்ள மாணவா்களுக்கும் தோ்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தோ்வு முடிந்த பிறகு கிருமிநாசினி தெளிக்கப்படவிருக்கிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

தோ்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒருதவணையாவது தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தோ்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளபடி துணையால் செய்த முகக்கவசங்களை மாணவா்கள் அணிவது கட்டாயமாகும். எல்லா தோ்வு மையங்களிலும் மாணவா்களின் உடல்நிலை சோதனை செய்யப்படுகிறது.

தோ்வுப் பணியில் ஈடுபடுவோா் காலை 8 மணிக்கு தோ்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. மாணவா்களும் தோ்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக செல்வது நல்லது. கரோனா அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் தோ்வு மையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படுவாா்கள் என்றும் அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

தோ்வு மையங்களில் சனிக்கிழமை ஆய்வு நடத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், ஞாயிற்றுக்கிழமையும் பெங்களூரில் உள்ள தோ்வுமையங்களில் ஆய்வு நடத்தி, தோ்வுக்கான ஏற்பாடுகளைப் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com